மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

ரூ. 8,000 - 12,000-ல் ஜியோ 5ஜி செல்போன்?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி அலைக்கற்றை ஒரு நல்ல வரம்பை அடைந்தவுடன், ரூ.8,000 முதல் ரூ.12,000 மதிப்புள்ள 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

ரூ. 8,000 - 12,000-ல் ஜியோ 5ஜி செல்போன்?

Updated On :27 செப்டம்பர் 2022, 2:42 pm IST


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி அலைக்கற்றை ஒரு நல்ல வரம்பை அடைந்தவுடன், ரூ.8,000 முதல் ரூ.12,000 மதிப்புள்ள 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 4ஜி ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஐந்தாவது தலைமுறை தொலைத்தொடர்புக்கு ஈர்த்து, அந்த இத்தில் தனது தலைமையை மேலும் உறுதி செய்துகொள்ளும் வகையில் இந்த திட்டத்தை ஜியோ எடுத்துள்ளது.

தி கௌண்டர்பாயிண்ட் ரிசர்ஜ் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலின்படி, லட்சக்கணக்கான 2ஜி வசதிகொண்ட ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை கூகுளுடன் இணைந்து உருவாக்கிய ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மூலம் 4ஜி நெட்வொர்க்கிற்கு ஈர்த்து, ஏற்கனவே ஜியோ நிறுவனம் செய்த அதே உத்தியை தற்போதும் கையிலெடுக்கப் போகிறதாகக் கூறப்படுகிறது.

ஜியோவின் வளர்ச்சிக்கு இருமுனை உத்தி மிகமுக்கிய பங்கு வகிப்பதாக இருக்கும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதாவது 5G சகாப்தத்திலும் அதன் தலைமையை நீட்டித்துக்குக் கொள்ளும். மேலும், 2024 ஆம் ஆண்டில், மலிவு விலையில் 5G mmWave+sub-6GHz ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையிலும் ஜியோ முதலிடத்துக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.