ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 ஆகஸ்ட் 2023, 10:57 am

DIN

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. 

நேற்று (புதன்கிழமை) 65,539.42 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வியாழக்கிழமை) காலை 65,503.85 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், 388.40 புள்ளிகள் குறைந்து 65,151.02 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 99.75 புள்ளிகள் குறைந்து 19,365.25 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

டைட்டன், பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் பேங்க், சன் பார்மா, டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 

ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, எம் & எம், ஐசிஐசிஐ வங்கி, மாருதி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.