ஏற்றத்துடன் நிறைவுற்ற பங்குச்சந்தைகள்! இன்று யாருக்கு லாபம்?

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவைக் கண்ட நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 
ஏற்றத்துடன் நிறைவுற்ற பங்குச்சந்தைகள்! இன்று யாருக்கு லாபம்?

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவைக் கண்ட நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமை 64,948.66 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 64,852.70 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 267.43 புள்ளிகள் அதிகரித்து 65,216.09 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 83.45 புள்ளிகள் உயர்ந்து 19,393.60 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி துறைமுகங்கள், பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று உயர்ந்தன. 

ஜியோ பைனான்ஸ், ரிலையன்ஸ், எம் & எம், பிபிசிஎல், பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com