ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜனவரி 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

News image
Updated On :10 டிசம்பர் 2023, 10:29 am

DIN

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜனவரி 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கிவரும் டாடா மோட்டார்ஸ் தனது வணிக வாகனங்களின் விலையை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பை ஈடுகட்டுவதற்காக விலை உயர்த்துவதாக கூறியுள்ளது. 

இந்த விலையுயர்வு தங்கள் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் முழுமைக்கும் பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, ஹோண்டா மற்றும் ஆடி போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஜனவரியில் வாகன விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.