வாரத்தின் 2வது நாளான இன்று பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. பங்குச்சந்தை நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.09 புள்ளிகள் உயர்ந்து 71,437.19 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. பங்குச்சந்தையில் இது 0.17% உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.45 புள்ளிகள் உயர்ந்து 21,453.10 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.16 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தையிலுள்ள 30 நிறுவன பங்குகளில் பெரும்பாலான நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. தேசிய பங்குச்சந்தையில் இந்தியன் ரயில்வே பைனான்ஸ், யெஸ் வங்கி, வோடாஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் பவர், ஐஓபி போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.