கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உச்சம் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச்சந்தை!

இந்திய பங்குச்சந்தை வணிகம் இன்று (டிச. 20) உச்சத்தை எட்டினாலும், நாள் இறுதியில் சரிவுடனே முடிவடைந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :20 டிசம்பர் 2023, 12:23 pm

DIN

இந்திய பங்குச்சந்தை வணிகம் இன்று (டிச. 20) உச்சத்தை எட்டினாலும், நாள் இறுதியில் சரிவுடனே முடிவடைந்தது.  சென்செக்ஸ்  ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

பங்குச்சந்தை வணிகம் நேற்று ஏற்றத்துடன் முடிந்த நிலையில், இன்றைய வணிகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. ஒருகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டு 72,000 புள்ளிகளை சென்செக்ஸ் தாண்டியது. 

எனினும் இரண்டாம் பாதியில் ஆயிரம் புள்ளிகள் சரிந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 71,000 புள்ளிகளை எட்டியது. 

நாள் இறுதியில் சென்செக்ஸ் 930.88 புள்ளிகள் சரிந்து 70,506.31 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. பங்குச்சந்தையில் இது 1.30 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 302 புள்ளிகள் சரிந்து 21,150 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது மொத்த வணிகத்தில் 1.41 சதவிகிதம் சரிவாகும். 

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல்தர 30 நிறுவனங்களில் எச்.டி.எஃப்.சி. வங்கி நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே நேர்மறையாக ஏறுமுகத்தில் இருந்தது. மற்ற 29 நிறுவனங்களுன் பங்குகளும் சரிவிலேயே முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.