உச்சத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்! இன்றும் 66,000 புள்ளிகளில் சென்செக்ஸ்

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 
உச்சத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்! இன்றும் 66,000 புள்ளிகளில் சென்செக்ஸ்
Published on
Updated on
1 min read

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 

நேற்று(வியாழக்கிழமை) 65,558.89 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 65,775.49 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

பங்குச்சந்தை நேர முடிவில், சென்செக்ஸ் 502.01 புள்ளிகள் அதிகரித்து 66,060.90 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இதன் மூலமாக சென்செக்ஸ் இன்றும் 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 150.75 புள்ளிகள் உயர்ந்து 19,564.50 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. 

ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், நெஸ்ட்லாண்ட், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. 

எம் & எம், பவர் கிரிட், சன் பார்மா, பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. 

நேற்றும்(வியாழக்கிழமை) சென்செக்ஸ் 66,000 புள்ளிகளையும் நிஃப்டி 19,500 புள்ளிகளையும் கடந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com