வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவு பெற்றுள்ளன.
நேற்று(வியாழக்கிழமை) 65,558.89 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 65,775.49 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது.
பங்குச்சந்தை நேர முடிவில், சென்செக்ஸ் 502.01 புள்ளிகள் அதிகரித்து 66,060.90 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இதன் மூலமாக சென்செக்ஸ் இன்றும் 66,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 150.75 புள்ளிகள் உயர்ந்து 19,564.50 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், நெஸ்ட்லாண்ட், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
எம் & எம், பவர் கிரிட், சன் பார்மா, பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
நேற்றும்(வியாழக்கிழமை) சென்செக்ஸ் 66,000 புள்ளிகளையும் நிஃப்டி 19,500 புள்ளிகளையும் கடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: நாளை இந்தியா வந்தடையும் 2 சரக்கு கப்பல்கள்!

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

