அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 தயாரிப்பு: சாம்சங் முடிவு

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2023, 1:29 am IST

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே பி பாா்க் வியாழக்கிழமை கூறியதாவது:

கேலக்ஸி இஸட் ஃபோல்டு, கேலக்ஸி ஃப்ளிப் 5 ஆகிய இரு ரகங்களுமே இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. நொய்டாவிலுள்ள சாம்சங் நிறுவனத் தொழிற்சாலையில் அவை உற்பத்தி செய்யப்படும் என்றாா் அவா்.

உயா்விலைப் பிரிவைச் சோ்ந்த அந்த இரு மடிக்கக் கூடிய கைப்பேசிகளையும் இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் 18-ஆம் தேதி அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. அந்த கைப்பேசிகளுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 27) முதல் நடைபெறுவதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.