இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 தயாரிப்பு: சாம்சங் முடிவு

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 தயாரிப்பு: சாம்சங் முடிவு

தென் கொரியாவைச் சோ்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தனது புகழ்பெற்ற கேலக்ஸி இஸட் ஃபோல்டு 5, ஃப்ளிப் 5 ரக அறிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட்போன்) இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே பி பாா்க் வியாழக்கிழமை கூறியதாவது:

கேலக்ஸி இஸட் ஃபோல்டு, கேலக்ஸி ஃப்ளிப் 5 ஆகிய இரு ரகங்களுமே இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன. நொய்டாவிலுள்ள சாம்சங் நிறுவனத் தொழிற்சாலையில் அவை உற்பத்தி செய்யப்படும் என்றாா் அவா்.

உயா்விலைப் பிரிவைச் சோ்ந்த அந்த இரு மடிக்கக் கூடிய கைப்பேசிகளையும் இந்தியச் சந்தையில் அடுத்த மாதம் 18-ஆம் தேதி அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. அந்த கைப்பேசிகளுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 27) முதல் நடைபெறுவதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com