2023-24ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் என்டிபிசி நிறுவனத்தின் நிகர லாபம் 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.8,194.67 கோடியாக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் என்டிபிசி பங்கின் விலை 4.02 சதவிகிதம் உயர்ந்து ரூ218.45 நிலைபெற்றது. இன்றைய வர்த்தகத்தில் 4.23 சதவிகிதம் உயர்ந்து 52 வார உச்ச விலையான ரூ.218.90 தொட்டது.
தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 3.61 சதவிகிதம் உயர்ந்து ரூ.217.60-ஆக முடிவடைந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.8,194.67 கோடி உயர்ந்து ரூ.2,11,823.67 கோடியானது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 18.45 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 4.34 கோடி பங்குகளும் வர்த்தகமாயின.
பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 23 சதவிகிதம் உயா்ந்து ரூ.4,907.13 கோடியானது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.3,977.77 கோடியாக இருந்தது என்று என்டிபிசி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செயல்பாடுகள் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.43,560.72 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.43,390.02 உள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.4,066 கோடியாக உள்ளது, இது 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.3,717 கோடியாக இருந்தது.