நேற்று(வியாழக்கிழமை) பங்குச்சந்தை சரிவைக் கண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
வியாழக்கிழமை 64,831.41 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 64,855.51 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது.
வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 555.75 புள்ளிகள் அதிகரித்து 65,387.16 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.
அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 181.50 புள்ளிகள் உயர்ந்து 19,435.30 புள்ளிகளில் முடிந்தது.
பவர் கிரிட், என்டிபிசி, ஐடிசி, மாருதி, டாடா ஸ்டீல், விப்ரோ உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன.
சன் பார்மா, எல்&டி, நெஸ்ட்லேண்ட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே சரிவை சந்தித்தன.
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: சிறப்புக்குழு அமைத்தது மத்திய அரசு!