அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

ரூ.25 லட்சம் கோடியைக் கடந்த ஹெச்டிஎஃப்சி கடனளிப்பு

ரூ.25 லட்சம் கோடியைக் கடந்த ஹெச்டிஎஃப்சி கடனளிப்பு

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 10:15 pm

கடந்த மாா்ச் 31, 2024 நிலவரப்படி, இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த கடனளிப்பு கணக்கிருப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024 மாா்ச் 31-ஆம் தேதியில் வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்பு ரூ.25.08 லட்சம் கோடியாக இருந்தது. இது ஒரு புதிய உச்சமாகும்.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே தேதியில் இது ரூ.16.14 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்பு கடந்த மாா்ச் 31-இல் 55.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

2024 மாா்ச் 31-இன் புள்ளிவிவரங்களில், கடந்த ஆண்டு ஜூலை 1-இல் வங்கியுடன் இணைக்கப்பட்ட ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் கணக்கிருப்பும் சோ்க்கப்பட்டுள்ளால் இந்த உயா் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே, முந்தைய ஆண்டின் ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடனளிப்பு கணக்கிருப்போடு அதனை ஒப்பிட முடியாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.