மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சென்செக்ஸ் எழுச்சி: சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி உயர்வு; 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி

தொடர்ந்து மூன்று நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது.

News image
கோப்புப் படம்.
Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:54 pm

DIN

நமது நிருபர்

தொடர்ந்து மூன்று நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 875 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. இதையடுத்து, சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடி உயர்ந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. கடந்த மூன்று தினங்களாக கடும் சரிவைச் சந்தித்திருந்த சந்தையில் ஐடி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ், ஃபார்மா, ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி காணப்பட்டது. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.8.97 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.448.57 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,531.24 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,357.45 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 972.33 புள்ளிகள் கூடுதலுடன் 79,565.40}இல் தொடங்கி அதிகபட்சமாக 79,639.20 வரை மேலே சென்றது. பின்னர், 79,106.20 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 874.94 புள்ளிகள் (1.11 சதவீதம்) கூடுதலுடன் 79,468.01}இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,031 பங்குகளில் 2,986 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 947 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 98 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

25 பங்குகள் விலை உயர்வு:

சென்செக்ஸ் பட்டியலில் அதானி போர்ட்ஸ், பவர்கிரிட், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், மாருதி உள்பட 25 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. ஆனால், இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன், டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பார்தி ஏர்டெல் ஆகிய 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 305 புள்ளிகள்

ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,289.40}இல் தொடங்கி அதிகபட்சமாக 24,337.70 வரை மேலே சென்றது. பின்னர் 24,184.90 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 304.95 புள்ளிகள் (1.27 சதவீதம்) கூடுதலுடன் 24,297.50}இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 44 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 6 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிம் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.