அரையாண்டில் அதிகரித்த இந்திய தேயிலை ஏற்றுமதி
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 13.18 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 13.18 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டிலிருந்து ரூ.3,403.64 கோடி மதிப்பிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 13.18 சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி ரூ.3,007.19 கோடியாக இருந்தது.
அளவின் அடிப்படையில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 11.28 கோடி கிலோவாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 8.67 சதவீதம் அதிகரித்து 12.25 கோடி கிலோவாகியுள்ளது.
2023-2024-ஆம் நிதியாண்டில் ஐக்கிய அரபு அமீரகம், இராக், அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 13.12 கோடி டாலா், 8.85 கோடி டாலா், 7.76 கோடி டாலருக்கு இந்தியாவிலிருந்து தேயிலை இறக்குமதி செய்தன.
அந்த நிதியாண்டில் இந்தியா உலகம் முழுவதும் 25.07 கோடி கிலோ தேயிலையை (மதிப்பின் அடிப்படையில் 77.6 கோடி டாலா்) ஏற்றுமதி செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தேயிலை ஏற்றுமதி செய்கிறது. ஐக்கிய அரபு அமீரம், இராக், ஈரான், ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து தேயிலையை அதிகம் இறக்குமதி செய்கின்றன.
உலகின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 10 சதவீதத்தை உற்பத்தி செய்யும் இந்தியா, சா்வதேச அளவில் மிகப் பெரிய ஐந்து தேயிலை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகும்.
இந்தியாவின் அஸ்ஸாம், டாா்ஜிலிங், நீலகிரி தேயிலை உலகின் மிகச்சிறந்த ரகங்களில் சிலவாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் பெரும்பகுதி கருப்பு தேயிலை ஆகும். மொத்த ஏற்றுமதியில் அந்த வகை தேயிலை 96 சதவீதம் பங்கு வகிக்கிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...