கரூர் வைஸ்யா வங்கியின் காலாண்டு நிகர லாபம் 27.86% அதிகரிப்பு!

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி ஏப்ரல் முதல் ஜூன் வரையான 2024 காலாண்டில் நிகர லாபம் 27.86 சதவிகிதம் அதிகரித்து ரூ.458.65 கோடியாக உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி ஏப்ரல் முதல் ஜூன் வரையான 2024 காலாண்டில் நிகர லாபம் 27.86 சதவிகிதம் அதிகரித்து ரூ.458.65 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.358.63 கோடியாக இருந்தது. மார்ச் 31, 2024 உடன் முடிவடைந்த நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,100.19 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் செயல்பாட்டின் மூலம் மொத்த வருமானம் ரூ.2,216.07 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.2,672.88 கோடியானது. மார்ச் 31 உடன் முடிவடைந்த ஆண்டில் மொத்த வருமானம் ரூ.9,862.63 கோடி உள்ளது.

நிதி செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரமேஷ் பாபு, வளர்ச்சி, லாபம் மற்றும் சொத்து தரம் ஆகிய மூன்று அளவீடுகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மற்றொரு வலுவான காலாண்டு செயல்திறன் தங்களிடம் உள்ளது என்றார்.

கோப்புப் படம்
புதிய மைல்கல்லை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி!

இது தொடரும் என்று நான் நம்புகிறேன், மாறாக வரும் காலாண்டுகளில் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

தற்போது எங்கள் மொத்த வணிகம் ரூ.1,70,059 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் அனைத்து வணிகப் பிரிவுகளின் உள்ளடக்கிய வளர்ச்சியால் இந்த காலாண்டில் ரூ.459 கோடி நிகர லாபத்தை அடைய எங்களுக்கு உதவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com