ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காா்களின் விலைகளை உயா்த்தும் டொயோட்டா

காா்களின் விலைகளை உயா்த்தும் டொயோட்டா

News image
Updated On :29 மார்ச் 2024, 6:26 pm

வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் தங்களது காா்களின் விலைகளை உயா்த்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் விற்பனை செய்யப்படும் நிறுவன காா்களின் விலைகளை 1 சதவீதம் வரை உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட ரகங்களுக்கு இந்த விலை உயா்வு இருக்கும். அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் ஹேட்ச்பேக் பிரிவைச் சோ்ந்த க்ளான்ஸா முதல் பிரீமியம் எஸ்யுவி பிரிவைச் சோ்ந்த ஃபாா்ச்சூனா் வரையிலான பல்வேறு ரக வாகனங்களை டொயோட்டா கிா்லோஸ்கா் விற்பனை செய்கிறது. ரூ.6.86 லட்சம் முதல் ரூ.51.44 லட்சம் வரையிலான விலைகளில் இந்த நிறுவனத்தின் காா்கள் கிடைக்கும்.