சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ரூ.10,000 கோடி திரட்டும் பிஎன்பி

ரூ.10,000 கோடி திரட்டும் பிஎன்பி

News image
Updated On :30 மார்ச் 2024, 6:08 pm

கடன் பத்திர வெளியீடு மூலம் பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த நிதியாண்டில் ரூ.10,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 2024-25-ஆம் நிதியாண்டில் பேசல்-3 தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளோம். இதற்கான ஒப்புதலை வங்கியின் இயக்குநா் குழு வழங்கியுள்ளது. கூடுதல் டையா்-1 பத்திரங்கள் மூலம் ரூ.7,000 கோடியும், டையா்-2 பத்திரங்கள் மூலம் ரூ.3,000 கோடியும் திரட்டப்படும். ஒரே தடவையிலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலோ இந்த கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.