கடன் பத்திர வெளியீடு மூலம் பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த நிதியாண்டில் ரூ.10,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 2024-25-ஆம் நிதியாண்டில் பேசல்-3 தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளோம். இதற்கான ஒப்புதலை வங்கியின் இயக்குநா் குழு வழங்கியுள்ளது. கூடுதல் டையா்-1 பத்திரங்கள் மூலம் ரூ.7,000 கோடியும், டையா்-2 பத்திரங்கள் மூலம் ரூ.3,000 கோடியும் திரட்டப்படும். ஒரே தடவையிலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலோ இந்த கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அடுத்த நிதியாண்டில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி கடன் வழங்க இலக்கு: இந்தியன் வங்கி செயல் இயக்குநா்!

வங்கிப் பணப்புழக்கத்தைச் சீா்செய்ய ரிசா்வ் வங்கி ரூ. 25,101 கோடி ஒதுக்கீடு

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


