அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

மின்சார வாகன பிரிவில் மஹிந்திராவின் முதலீடு

News image
Updated On :16 மே 2024, 11:02 am

DIN

வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம்&எம்), அதன் மின்சார வாகன உற்பத்தி பிரிவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில், மஹிந்திரா எலெக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடட் (எம்இஏஎல்) நிறுவனத்தில் ரூ.12 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

போதுமான முதலீட்டை ஏற்பாடு செய்துள்ள மஹிந்திரா கூடுதலாக நிதி திரட்ட போவதில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (பிஐஐ) ரூ.1200 கோடி மஹிந்திராவில் மின்சார கார்கள் உற்பத்தி துணை நிறுவனமான எம்இஏஎல்-லில் முதலீடு செய்துள்ளது.

சிங்கப்பூரை மையமாக கொண்ட டெமாசெக் நிறுவனம் ரூ.300 கோடி ஏற்கெனவே முதலீடு செய்துள்ள நிலையில் ஒப்புக்கொண்ட ரூ.900 கோடி முதலீட்டை காலக்கெடுவுக்குள் அளிக்கவுள்ளதாகவும் ஆவணத்தில் எம்&எம் தெரிவித்துள்ளது.

எம்இஏஎல் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.3,207.14 கோடியாக உள்ளது. 2022 அக்டோபரில் லிமிடட் நிறுமமாக நிறுவப்பட்ட இதன் செயல்பாடுகள் மூலமாக கடந்த நிதியாண்டு ஈட்டப்பட்ட வருவாய் எதுவுமில்லை என தெரிவித்துள்ளது, மஹிந்திரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.