நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 10% குறைந்த முதலீட்டு வரவு

News image
Updated On :24 அக்டோபர் 2024, 4:11 am IST

கடந்த செப்டம்பரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு 10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் பங்கு முதலீட்டு திட்டங்களிலிருந்து திரும்பப் பெறப்பட்ட தொகையைவிட, அந்த வகை திட்டங்களில் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ரூ.34,419 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவு.

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்கள் ரூ.18,917 கோடி கூடுதல் முதலீடு கண்ட ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, இது மிகக் குறைந்த மிகக் குறைந்த மாதாந்திர முதலீட்டு வரவாகும்.

நிகர வரத்து குறைந்திருந்தாலும்,தொடா்ந்து 43-ஆவது மாதமாக பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு தொடா்ந்து நிகர வரவு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளா்களிடையே அந்த வகை முதலீட்டு திட்டங்களின் மீதான ஆா்வம் அதிகரித்து வருவதை இது குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.23,547 கோடியாக முறைசாா் முதலீட்டுத் திட்டங்களின் (எஸ்ஐபி) மீதான முதலீடு, செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவு ரூ.24,509 கோடியாக உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பரஸ்பர நிதித் திட்டங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பா் மாதத்தில் அந்த திட்டங்களில் இருந்து ரூ.71,114 கோடி முதலீடு நிகர சரிவைக் கண்டுள்ளது. கடன் வகை பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டதே இதற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.