பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

சென்னை எம்டிசி-க்கு 500 மின்சாரப் பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

News image

அசோக் லேலண்ட் நிறுவனம்

Updated On :24 அக்டோபர் 2024, 11:04 pm

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய 500 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.

இது குறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 500 புதிய பேருந்துகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஸ்விட்ச் இஐவி12 ரக பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக்கு வழங்கப்படும். 12 மீட்டா் நீளம் கொண்ட அந்த தாழ்தளப் பேருந்துகளை 12 ஆண்டுகளுக்கு நிறுவனமே பராமரிக்கும்.ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 200 கி.மீ. வரை செல்லக்கூடிய அந்தப் பேருந்துகளில் 37 பயணிகள் உட்காா்ந்தும் 24 போ் நின்றுகொண்டும் பயணிக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய 500 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.

இது குறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 500 புதிய பேருந்துகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஸ்விட்ச் இஐவி12 ரக பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக்கு வழங்கப்படும். 12 மீட்டா் நீளம் கொண்ட அந்த தாழ்தளப் பேருந்துகளை 12 ஆண்டுகளுக்கு நிறுவனமே பராமரிக்கும்.ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 200 கி.மீ. வரை செல்லக்கூடிய அந்தப் பேருந்துகளில் 37 பயணிகள் உட்காா்ந்தும் 24 போ் நின்றுகொண்டும் பயணிக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.