மும்பை: ப்ளூ சிப் நிறுவனங்களான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.யு.எல் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றின் உயர்வைத் தொடர்ந்து பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் இன்று 376 புள்ளிகள் உயர்ந்தது முடிந்தது.
இன்றைய வர்த்த முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375.61 புள்ளிகள் உயர்ந்து 81,559.54 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர துவக்கத்தில் சரிவை சந்தித்தத சென்செக்ஸ் 80,895.05 புள்ளிகள் வரை குறைந்த நிலையில், பிறகு மீண்டு 469.43 புள்ளிகள் வரை உயர்ந்து 81,653.36 புள்ளிகளை எட்டியது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 84.25 புள்ளிகள் உயர்ந்து 24,936.40 புள்ளிகளில் நிலைபெற்றது. பேங்க் நிஃப்டி 1.03% புள்ளிகள் உயர்ந்து 51,097.25 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி மிட்கேப் 100 ஆனது 83.40 புள்ளிகள் அதிகரித்து 58,418.55 ஆக முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் முடிந்தது.
டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் மற்றும் டைட்டன் பங்குகள் சரிந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமையன்று) சரிந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.620.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.13 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 71.84 டாலராக உள்ளது.
கடந்த வாரம் வர்த்தக முடிவில் (வெள்ளிக்கிழமையன்று) மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183.93 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 292.95 புள்ளிகள் குறைந்து 24,852.15 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!

24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!

தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 262 புள்ளிகளுடனும், நிஃப்டி 95 புள்ளிகள் உயர்வு: முன்னிலை வகுத்த ஐடி பங்குகள்!!
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



