
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தனது பயணிகளின் வாகனங்களின் விலையை ரூ.62,000 வரை உயர்த்துவதாக அறிவித்தது.
அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள், மூலப்பொருட்கள் விலை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றால் வாகனங்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 8, 2025 முதல் கார்களின் விலையை உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செலவுகளை மேம்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்கும் நிறுவனம் உறுதிபூண்டுள்ள நிலையில், அதிகரித்து வரும் செலவுகளில் சிலவற்றை வாடிக்கையாளர்களுக்கு கடத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிராண்ட் விட்டாரா, ஈகோ, வேகன்-ஆர், எர்டிகா, எக்ஸ்எல் 6, டிசையர் டூர் எஸ் மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய மாடல்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும் என்றது.
மாருதி மாடல்கள் - விலை அதிகரிப்பு
கிராண்ட் விட்டாரா - ரூ.62,000 வரை
ஈகோ - ரூ.22,500 வரை
வேகன்-ஆர் - ரூ.14,000 வரை
எர்டிகா - ரூ.12,500 வரை
எக்ஸ்எல் 6 - ரூ.12,500 வரை
டிசையர் டூர் எஸ் - ரூ.3,000 வரை
ஃப்ரான்க்ஸ் - ரூ.2,500 வரை
கடந்த மாதம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் கியா இந்தியா ஆகிய நிறுவனங்களும் ஏப்ரல் 2025 முதல் தங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.