அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள் திறப்பு!

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

News image
புதிய கிளை
Updated On :17 ஏப்ரல் 2025, 8:46 am

DIN

ஒரே நாளில் தங்கமயிலின் ஐயப்பன்தாங்கல் மற்றும் விருகம்பாக்கம் கிளைகள் திறக்கப்பட்டது.

சென்னை ஐயப்பன்தாங்கல் கிளையை நிர்வாக இயக்குநர் பலராம் கோவிந்தாஸ் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் பா ரமேஷ் திறந்து வைத்தார். விருகம்பாக்கம் கிளையை இணை நிர்வாக இயக்குநர் என்பி குமார் மற்றும் தங்கமயில் குடும்பத்தினர் இணைந்து திறந்து வைத்தனர்.

மாமதுரையை தலைமையிடமாகக் கொண்ட தங்கமயில் நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது. இன்று 30 இலட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் 60 கிளைகளை பரப்பி இந்த மண்ணின் மனம் கவர்ந்த ஒரு ஜுவல்லரியாக மாறியிருக்கிறது.

தங்கமயில் ஜூவல்லரி மிகச் சிறந்த நகைகளுக்கும் மிகக் குறைந்த சேதாரத்தை வழங்குவது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக தங்கமயில் ஜுவ ல்லரி ஷோரூமுக்கு உள்ளேயே தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் 'தங்க மாங்கல்யம்' என்னும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்துகிறது.

மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், இரத்தினக் கற்களில் அமைந்த நகைகள் வெள்ளி நகைகள் என்று அனைத்திலும் விதவிதமான திருமண நகைகளின் கலெக்ஷன்களையும், டிசைன்களையும் இந்தியாவிலேயே மிகச் சிறந்த விலைக்கு ஒரே இடத்தில் வாங்கிடலாம் என தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவு எண்ணிலடங்கா திருமண நகை கலெக்ஷன்கள், டிசைன்கள், பிரைடல் செட் என்று தங்கமயில் ஜூவல்லரி தனித்துவமான மற்றும் மிக பிரம்மாண்ட தங்கமாங்கலயம் கலெக்ஷன்களை வடிவமைத்திருப்பது மிகவும் கவனித்தக்க ஒன்று.

'தரமான சேவை அளிக்க வேண்டும், ஒவ்வொரு தயாரிப்பையும் நியாயமான விலைக்கு வழங்க வேண்டும். குறுகிய கால வளர்ச்சியாக இல்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையோடு நீண்ட காலம் பயணிக்க வேண்டும். இதுதான் எங்கள் இலக்கு, அதற்கான சரியான திட்டமிடுதல், வழிகாட்டுதல்கள், சிறப்பான சேவைக்கான தேவைகள் என அனைத்தையும் நாங்கள் உருவாக்கி அதன்படி நடந்து வருகிறோம். இப்போது சென்னை ஐயப்பன் தாங்கல் மற்றும் விருகம்பாக்கம் கிளையில் உங்களுடன் இந்த பயணத்தை துவக்கியிருக்கிறோம்.

Story image

சென்னை மக்களுடைய தேவைகள், விருப்பங்கள் இவற்றின் அடிப்படையில் இந்த ஷோரூமை வடிவமைத்துள்ளோம். உள்கட்டமமைப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள் என்று அனைத்திலும் அதிநவீன வசதிகளை அறிமுகப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமிற்கு மாபெரும் ஆதரவு அளிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம் என்று நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பேசும்போது தங்கமயில் ஜூவல்லரியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.