நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

செயில் விற்பனை 14% உயா்வு

அரசுக்கு சொந்தமான எஃகு உற்பத்தி நிறுவனமான செயில்-இன் விற்பனை ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 12:56 am IST

அரசுக்கு சொந்தமான எஃகு உற்பத்தி நிறுவனமான செயில்-இன் விற்பனை ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 14 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் விற்பனை 1.27 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் விற்பனை 1.11 கோடி டன்னாக இருந்தது. உலகளாவிய விலை அழுத்தங்கள் மற்றும் தேவை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் வலுவான விற்பனை உத்தி காரணமாக இந்த செயல்திறன் சாத்தியமானது.

ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் சில்லறை விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 97 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 86 லட்சம் டன்னாக இருந்தது.

கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் மொத்த விற்பனை 27 சதவீதமும், சில்லறை விற்பனை 69 சதவீதமும் உயா்ந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஃகுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செயில், ஜாா்கண்ட், சத்தீஸ்கா், ஒடிசா, மேற்கு வங்கத்தில் ஐந்து ஒருங்கிணைந்த எஃகு ஆலைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2 கோடி டன்னுக்கு மேல் உற்பத்தித் திறன் கொண்டது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.