தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

இந்தியாவின் புகையிலை ஏற்றுமதி 8% அதிகரிப்பு!

நாட்டின் புகையிலை ஏற்றுமதி, 2024ல் 8 சதவிகித வளர்ச்சியை எட்டும் நிலையில், அது ரூ.13 ஆயிரம் கோடி தாண்டும் எனறார் மத்திய அரசின் மூத்த அதிகாரி.

News image

புகையிலை

Updated On :3 ஜனவரி 2025, 5:29 pm IST

புதுதில்லி: நாட்டின் புகையிலை ஏற்றுமதி, 2024ல் 8 சதவிகித வளர்ச்சி எட்டும் போது, அதன் வர்த்தகம் ரூ.13 ஆயிரம் கோடி தாண்டும் எனறார், மத்திய அரசின் பெயர் வெளியிடாத மூத்த அரசு அதிகாரி.

அதே வேளையில், விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க புகையிலை வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக புகையிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா, பிரேசில் மற்றும் ஜிம்பாப்வேக்கு அடுத்தபடியாக ஃப்ளூ-க்யூர்டு வர்ஜீனியா புகையிலை உற்பத்தியில் இந்தியா 4வது பெரிய உற்பத்தியாளராகும்.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக உற்பத்தி செய்யப்படாத புகையிலை ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் கருவூலத்திற்கு கணிசமான அந்நிய செலாவணி அதிகரித்தும் வருகிறது.

இந்த ஆண்டு ரூ.13,000 கோடி மேல் வணிகம் நடைபெறும் என்று கணித்துள்ள வேளையில், புகையிலை விவசாயிகளின் வருமானமும் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.

2023-24ல் ஏற்றுமதி ரூ.12,005.89 கோடியாக உள்ள நிலையில், புகையிலை வாரியமானது புகையிலை தொழிற்துறையின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்யும் பயிர் திட்டமிடல் மற்றும் உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.