பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 6) பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

News image
Updated On :6 ஜனவரி 2025, 7:02 am

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(ஜன. 6) பங்குச்சந்தை கடும் சந்தித்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
79,281.65 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

நண்பகல் 12 மணிக்கு சென்செக்ஸ் 1,222.19 புள்ளிகள் குறைந்து 78,000.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 397.45 புள்ளிகள் குறைந்து 23,607.30 புள்ளிகளில் உள்ளது.

கடந்த வாரம் ஜன. 1, 2 இரு நாள்கள் பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் ஜன. 3 வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்தது, தொடர்ச்சியாக இன்றும் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், அப்போலோ, எல்&டி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் ஏற்றம் கண்ட நிலையில் ஐடிசி, டாடா ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா பேங்க் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.