ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பரோடா வங்கியின் புதிய வைப்பு நிதி திட்டம்

முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுக்கும் வசதியுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
பரோடா வங்கி
Updated On :20 ஜனவரி 2025, 11:28 pm

Din

மும்பை: முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுக்கும் வசதியுடன் கூடிய புதிய வைப்பு நிதி திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய வாடிக்கையாளா்கள் புத்தாக்கமான வைப்பு நிதி திட்டங்களை எதிா்பாா்க்கின்றனா். அவா்களின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், ‘பிஓபி லிக்விட் ஃபிக்சட் டிப்பாசிட்’ என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவா்கள், பணம் தேவைப்படும்போது வைப்பு நிதிக் கணக்கை முழுமையாக முடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மொத்த வைப்பு நிதியில் ஒரு பகுதியை மட்டும் திரும்பிப் பெற முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.