பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

வாரத்தின் முதல்நாளான இன்று(ஜன. 20) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

News image
Updated On :20 ஜனவரி 2025, 7:20 am

DIN

வாரத்தின் முதல்நாளான இன்று(ஜன. 20) பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,978.53 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகல் 12.40 மணியளவில், சென்செக்ஸ் 553.20 புள்ளிகள் அதிகரித்து 77,172.53 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 142.30 புள்ளிகள் உயர்ந்து 23,345.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

கோட்டக் மஹிந்திரா வங்கி, விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டிய முக்கிய நிறுவனங்களாகும்.

அதேநேரத்தில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஸ்ரீராம் நிதி, டிரென்ட், எச்டிஎஃப்சி லைஃப், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

ஆட்டோ மொபைல், எஃப்எம்சிஜி நிறுவனங்கள் தவிர, பொதுத்துறை, தொலைத்தொடர்பு, மின்சாரம், பொதுத்துறை வங்கி என மற்ற அனைத்துத் துறைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.