பங்குச் சந்தை வணிகத்தில், வார இறுதி நாளான இன்று நிஃப்டி 113 புள்ளிகள் சரிந்தும், சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்த நிலையில் வணிகம் நிறைவுற்றது.
முன்னதாக, இன்றைய வணிகத்தின்போது, இரு பங்குச் சந்தைகளிலும் சரிவு நிலை காணப்பட்டது. நிஃப்டி 0.67 சதவீதம் அதாவது 23,050 என்ற புள்ளிகளிலும் சென்செக்ஸ் 0.56 சதவீதம் சரிந்து அதாவது 76,091.7 என்ற புள்ளிலும் வணிகமானது.
நிஃப்டி பங்குச் சந்தையில் இன்று ஹிந்துஸ்தான் யூனிலிவர், எய்சர் மோட்டார்ஸ், பிரிட்டானியா இன்டஸ்ட்ரிஸ் ஆகியவற்றின் பங்குகள் அதிக லாபம் பெற்றன. டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டிரிஸ், டிரென்ட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் நட்டத்தை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தைகள் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் சரிவிலேயே வணிகம் நிறைவு பெற்றுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு நாள்களாக சற்று ஏறியிருந்த பங்குகள் மூலம், லாபத்தைப் பார்த்த முதலீட்டாளர்கள் கூட, இன்றைய வணிகத்தின்போது நேரிட்ட சரிவால் நட்டமடைந்துள்ளனர்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.21 ஆக இருந்தது. வியாழக்கிழமை வணிகம் நிறைவு பெற்றபோது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.47 காசுகளாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி: உச்சம் தொட்ட எஃப்எம்சிஜி, வாகனத் துறை பங்குகள்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


