தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 28) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

News image
Updated On :28 ஜனவரி 2025, 6:45 am

பங்குச்சந்தை இன்று(ஜன. 28) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
75,659.00 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றமடைந்து வரும் நிலையில், பிற்பகல் 12.07மணியளவில், சென்செக்ஸ் 774.62 புள்ளிகள் அதிகரித்து 76,140.79 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.70 புள்ளிகள் உயர்ந்து 23,026.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நேற்று பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது.

சென்செக்ஸ் பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி அதிக லாபமடைந்துள்ளன. மேலும் ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

சன் பார்மாட்டிகல், மாருதி சுசுகி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஆட்டோமொபைல் துறையைத் தவிர மற்ற துறைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.