பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வு!

திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்துள்ளது.

News image

தங்கம் விலை உயர்வு 

Updated On :21 ஜூலை 2025, 11:36 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.9,180க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கும் விற்பனையாகி வருகிறது.

ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை சவரனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கு விற்பனையான நிலையில், இன்று நான்காவது நாளாக மீண்டும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.9,110-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கும், கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.9,170-க்கும் விற்பனையானது. இன்று நான்காவது நாளாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

அதேபோல், இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.