16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வு!

திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும் தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை உயர்வு 

Published On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.9,180க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கும் விற்பனையாகி வருகிறது.

ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை சவரனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கு விற்பனையான நிலையில், இன்று நான்காவது நாளாக மீண்டும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில் வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.9,110-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கும், கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.9,170-க்கும் விற்பனையானது. இன்று நான்காவது நாளாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

அதேபோல், இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.