யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரடி ஆதிக்கம்..! சென்செக்ஸ் 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிந்துள்ளதைப் பற்றி...

News image
பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம்..!
Updated On :25 ஜூலை 2025, 6:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்செக்ஸ் கடந்த 2 நாள்களில் 1,200 புள்ளிகள் சரிந்துள்ளது. மேலும், நிஃப்டி 24,900 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 25) காலை நேற்றைப் போலவே இன்றும் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை குறைந்து 81,540 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இது இண்ட்ராடே வர்த்தகத்தில் 1 சதவிகிதம் சரிவாகும்.

அதேபோல், தேசிய குறியீட்டு எண்ணான நிஃப்டியும் கிட்டத்தட்ட 1 சதவிகிதமான 196 புள்ளிகள் குறைந்து 24,844 புள்ளிகளில் வர்த்தகமானது. மிட்கேப் இண்டெக்ஸ் மற்றும் ஸ்மால் கேப் இண்டெக்ஸ் இரண்டும் முறையே 1 சதவிகிதம் மற்றும் 1.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்தன.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1.4 சதவிகிதமான 1200 புள்ளிகள் வரை சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தையில் நேற்றுமுன் தினமான 23 ஆம் தேதியிலிருந்து இன்று வரை முதலீட்டார்கள் ரூ7 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளனர்.

மும்பை பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, அல்ட்ராடெக் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பங்குகள் மட்டுமே லேசான ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மற்ற அனைத்து பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.

summary

Sensex crashes 1,200 points in 2 days; Nifty 50 slips below 24,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.