எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்னுரிமை அடிப்படையில், ஒதுக்கீடு செய்ததில் மொத்தம் ரூ.416 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2025, 9:34 pm IST

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்னுரிமை அடிப்படையில், ஒதுக்கீடு செய்ததில் மொத்தம் ரூ.416 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முன்னுரிமை ஒதுக்கீடுகள், நிறுவகாத்தில் உள்ள ஆதித்ய குமார் ஹல்வாசியா மற்றும் எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்டிற்கு வழங்கப்பட்டன.

முன்னுரிமை வெளியீட்டில் முதலில் 2.70 கோடி ஈக்விட்டி பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.114 விலையில் ஒதுக்கப்பட்டன. இது மொத்தம் ரூ.308 கோடியாகும். அதே விலையில் 3.80 கோடி மாற்றக்கூடிய ஈக்விட்டி வாரண்டுகளும் வழங்கப்பட்டது.

சலுகையின் ஒரு பகுதியாக, முதலீட்டாளர் குழுவினர் 1.68 கோடி மாற்றத்தக்க ஈக்விட்டி வாரண்டுகளுக்கு சந்தா செலுத்தியுள்ளனர்.

திரட்டப்பட்ட மூலதனம் வளர்ச்சி முயற்சிகள், செயல்பாட்டு மூலதனத் தேவைகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் மற்றும் மிஷன்-கிரிட்டிகல் தீர்வுகளில் நிறுவனத்தின் புதுமை திறன்களை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.