பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்னுரிமை அடிப்படையில், ஒதுக்கீடு செய்ததில் மொத்தம் ரூ.416 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2025, 4:04 pm

DIN

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்னுரிமை அடிப்படையில், ஒதுக்கீடு செய்ததில் மொத்தம் ரூ.416 கோடிக்கு மேல் நிதி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முன்னுரிமை ஒதுக்கீடுகள், நிறுவகாத்தில் உள்ள ஆதித்ய குமார் ஹல்வாசியா மற்றும் எல்.ஐ.சி. மியூச்சுவல் ஃபண்டிற்கு வழங்கப்பட்டன.

முன்னுரிமை வெளியீட்டில் முதலில் 2.70 கோடி ஈக்விட்டி பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.114 விலையில் ஒதுக்கப்பட்டன. இது மொத்தம் ரூ.308 கோடியாகும். அதே விலையில் 3.80 கோடி மாற்றக்கூடிய ஈக்விட்டி வாரண்டுகளும் வழங்கப்பட்டது.

சலுகையின் ஒரு பகுதியாக, முதலீட்டாளர் குழுவினர் 1.68 கோடி மாற்றத்தக்க ஈக்விட்டி வாரண்டுகளுக்கு சந்தா செலுத்தியுள்ளனர்.

திரட்டப்பட்ட மூலதனம் வளர்ச்சி முயற்சிகள், செயல்பாட்டு மூலதனத் தேவைகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் மற்றும் மிஷன்-கிரிட்டிகல் தீர்வுகளில் நிறுவனத்தின் புதுமை திறன்களை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.