செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்...

News image

தங்கம் விலை நிலவரம் - ANI

Updated On :4 ஜூன் 2025, 9:49 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலையும் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை மற்றும் மாலை என இரு முறை தங்கத்தின் விலை உயர்ந்தது. மொத்தமாக ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் ஒரு கிராம் ரூ. 9,060-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 72,640 -க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று காலையும் சவரனுக்குர் ரூ. 80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9,090 ஆகவும் சவரன் ரூ. 72,720 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நீண்ட நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை, நேற்று கிராமுக்கு ரூ. 2 அதிகரித்த நிலையில், இன்றும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 114 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,14,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.