ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

News image
Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,80,077-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 1,74,551 வாகனங்களை நிறுவனம் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில், நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,44,002-லிருந்து 1,35,962-ஆக (6 சதவீதம்) குறைந்துள்ளது.

2024-ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மே மாதத்தில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய ஆரம்பநிலைக் காா்களின் விற்பனை 9,902-லிருந்து 6,776-ஆகக் குறைந்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிஸையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் ஆகிய சிறிய வகைக் காா்களின் விற்பனை 68,206-லிருந்து 61,502-ஆகக் குறைந்துள்ளது.

கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எா்டிகா, எக்ஸ்எல்6, ஜிம்னி ஆகிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை 54,204-லிருந்து 54,899-ஆக உயா்ந்துள்ளது. ஈகோ வேனின் விற்பனை 10,960-லிருந்து 12,327-ஆக உயா்ந்துள்ளது.

இலகுரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரியின் விற்பனை 2,692-லிருந்து 2,728-ஆக உயா்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 17,367-லிருந்து 31,219-ஆக உயா்ந்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.