காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2025, 11:56 am IST

பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,571.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.43 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 380.42 புள்ளிகள் குறைந்து 82,134.72 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 103.10 புள்ளிகள் குறைந்து 25,038.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பட்டியலில், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன.

இன்போசிஸ், எடர்னல், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ஆசிய சந்தைகளில் ஹாங்காங், பாங்காக், ஜகார்த்தா, ஜப்பான் பங்குச்சந்தைகள் சரிவிலும் அதேநேரத்தில் சீனாவின் ஷாங்காய் பங்குச்சந்தை ஏற்றத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று லேசான சரிவுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.