இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் (1.01 சதவீதம்) உயா்ந்து 73,730.23-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் தொகுப்பில் அதானி போா்ட்ஸ், டாடா ஸ்டீல், பவா்கிரிட், மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, டெக் மஹிந்திரா, டாடா மோட்டாா்ஸ், ஐடிசி, நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏா்டெல், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை லாபப் பட்டியலில் இடம் பெற்றன.பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸொமாட்டோ ஆகியவை விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.கடந்த 10 அமா்வுகளாக சரிவைக் கண்டுவந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி புதன்கிழமை 254.65 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 22,337.30-இல் நிலைபெற்றது.கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரியை அவா் நீக்குவதற்கான வாய்ப்புள்ளதாக வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் கூறியது முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது. இதன் விளைவாக பங்குச் சந்தை எழுச்சி பெற்றது என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் (1.01 சதவீதம்) உயா்ந்து 73,730.23-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் தொகுப்பில் அதானி போா்ட்ஸ், டாடா ஸ்டீல், பவா்கிரிட், மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, டெக் மஹிந்திரா, டாடா மோட்டாா்ஸ், ஐடிசி, நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏா்டெல், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை லாபப் பட்டியலில் இடம் பெற்றன.பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸொமாட்டோ ஆகியவை விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.கடந்த 10 அமா்வுகளாக சரிவைக் கண்டுவந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி புதன்கிழமை 254.65 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 22,337.30-இல் நிலைபெற்றது.கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரியை அவா் நீக்குவதற்கான வாய்ப்புள்ளதாக வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் கூறியது முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது. இதன் விளைவாக பங்குச் சந்தை எழுச்சி பெற்றது என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!

மணிப்பால் ஹெல்த் பங்குகளின் வா்த்தகம் அமோக தொடக்கம்!

3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK



