திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

8 சதவிகிதம் வரை உயர்ந்த மணப்புரம் பைனான்ஸ்!

பெயின் கேபிடல், தங்கக் கடன் நிதியளிப்பாளரான மணப்புரம் ஃபைனான்ஸில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்காக ரூ.5,764 கோடி மதிப்பிலான ஓபன் ஆஃபர் மூலம் பணிகளை தொடங்கியது.

News image

manapurma075255

Updated On :21 மார்ச் 2025, 9:55 pm IST

புதுதில்லி: அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடல், தங்கக் கடன் நிதியளிப்பாளரான மணப்புரம் ஃபைனான்ஸில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்காக ரூ.5,764 கோடி மதிப்பிலான ஓபன் ஆஃபர் மூலம் பணிகளை தொடங்கியதை அடுத்து, அதன் பங்குகள் 8% வரை உயர்ந்து முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில், மணப்புரம் பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையில் 7.70% உயர்ந்து ரூ.234.25 ஆக நிலைபெற்றது. வர்த்தக தொடக்கத்தில் இது 13.81 சதவிகிதம் வரை உயர்ந்து, அதன் 52 வார உச்ச விலையான ரூ.247.55 ஐ பதிவு செய்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 7.77% உயர்ந்து ரூ.234.40 ஆக முடிந்தது.

இன்றைய வர்த்தக அளவின் அடிப்படையில், நிறுவனத்தின் 62.64 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆன நிலையில், என்எஸ்இ-யில் 1,463.61 லட்சம் பங்குகள் வர்த்தகமானது.

மணப்புரம் ஃபைனான்ஸில் 18% பங்குகளை ரூ.4,385 கோடிக்கு வாங்க பெயின் கேபிடல் முடிவு செய்ததைத் தொடர்ந்து, இதன் திறந்த சலுகை விலையாக ஒரு பங்கிற்கு ரூ.236 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த முதலீடு, நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தூண்டுவதையும், செயல்பாட்டு சிறப்பை மேம்படுத்துதல், தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் முக்கிய பிரிவுகளில் அதன் இருப்பை விரிவுபடுத்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றது பெயின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.