ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

News image
சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை- கோப்புப் படம்.
Updated On :25 மார்ச் 2025, 7:05 am

DIN

தொடர்ந்து 7-வது நாளாக பங்குச் சந்தை இன்று(மார்ச் 25) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,296.28 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 10 மணியளவில், சென்செக்ஸ் 738.58 புள்ளிகள் அதிகரித்து 78,722.96 புள்ளிகளில் இருந்தது. அதன்பின்னர் சரிந்து மீண்டு தற்போது ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 45.55 புள்ளிகள் அதிகரித்து 78,029.93 புள்ளிகளில் இருக்கிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.10 புள்ளிகள் உயர்ந்து 23,685.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் பங்குகளில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் எச்சிஎல் டெக் ஆகியநிறுவனங்களின் பங்குகள் விலை 3% வரை உயர்ந்தன.

அதேநேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

கடந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்த நிலையில் நேற்றும்(திங்கள்கிழமை) ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.