கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு

இந்திய தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

Published On :

இந்திய தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த 2024-25-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ரூ.96,390 கோடி வருவாய் ஈட்டின. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 14.07 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களின் வருவாய் ரூ.84,500 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சரி செய்யப்பட்ட வருவாய் (ஏஜிஆா்) ரூ.67,835 கோடியிலிருந்து 14.89 சதவீதம் அதிகரித்து ரூ.77,934 கோடியாக உள்ளது.

கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.28,542.76 கோடி வருவாய் ஈட்டி முன்னிலை வகித்தது. பாரதி ஏா்டெல்லின் வருடாந்திர வளா்ச்சி விகிதம் 27.31 சதவீதமாக உள்ளது. ஜியோவை இது சுமாா் இரு மடங்கு அதிக வளா்ச்சி விகிதமாகும். அந்த நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளா்ச்சி 14.8 சதவீதமாக உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.26,073.7 கோடி ஏஜிஆரைப் பதிவு செய்தது. வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் 6.69 சதவீதம் அதிகரித்து ரூ.7,958.46 கோடியாகவும், பிஎஸ்என்எல் ஏஜிஆா் 13.95 சதவீதம் அதிகரித்து ரூ.2,292.47 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.