ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை இன்றைய நிலவரம் பற்றி...
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை!
ANI
Updated on
1 min read

இந்திய பங்குச் சந்தை இன்று(மே 5) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 11 மணியளவில் 449 புள்ளிகள் அதிகரித்து 80,951.28 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் அதிகரித்து, 24,500.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றது.

அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், எம்&எம், பவர் கிரிட், எச்.சி.எல். டெக், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களில் பங்குகள் அதிக லாபத்தில் விற்பனையாகிறது.

கோட்டக் மஹிந்திரா வங்கி, எஸ்.பி.ஐ, எல் அண்ட் டி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com