மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிரானுல்ஸ் இந்தியாவின் 4-வது காலாண்டு நிகர லாபம் 17% ஆக உயர்வு!

மருந்து நிறுவனமான கிரானுல்ஸ் இந்தியா, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 17% அதிகரித்து ரூ.152 கோடியாக உள்ளது.

News image
Updated On :28 மே 2025, 2:19 pm

DIN

புது தில்லி: மருந்து நிறுவனமான கிரானுல்ஸ் இந்தியா, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 17% அதிகரித்து ரூ.152 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் ரூ.130 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்துள்ளது.

செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 4-வது காலாண்டில் ரூ.1,197 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,176 கோடியாக இருந்தது. நிதியாண்டு 2025ல் மருந்து நிறுவனம் ரூ.501 கோடி ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்தது. அதே வேளையில் நிதியாண்டு 2024ல் இது ரூ.405 கோடியாக இருந்தது. இருப்பினும் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,482 கோடியாகக் குறைந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் இதுவே ரூ.4,506 கோடியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் விற்பனை நிலையாக இருந்தபோதிலும், இந்த ஆண்டு நிலையான லாபம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் கிரானுல்ஸ் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ண பிரசாத்.

மருந்து நிறுவனம் 2024-25 நிதியாண்டிற்கு தலா 1 ரூபாய் முக மதிப்பில் உள்ள ஒரு பங்கிற்கு ரூ.1.50 என்ற இறுதி ஈவுத்தொகையை பரிந்துரைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 1.29 சதவிகிதம் குறைந்து ரூ.522.05 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.