பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image

மும்பை பங்குச் சந்தை

கோப்புப் படம்

Updated On :30 மே 2025, 6:28 am

DIN

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11:44 மணி நிலவரப்படி 279.41 புள்ளிகள் குறைந்து 81,353.62 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 87.70 புள்ளிகள் குறைந்து 24,745.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பாரதி ஏர்டெல், சன் பார்மா, டாடா ஸ்டீல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.2 சதவீதம், 0.25 சதவீதம் சரிந்தன. துறைகளில் நிஃப்டி மெட்டல் 1.5 சதவீதம், நிஃப்டி ஐடி 0.96 சதவீதம், நிஃப்டி ஆட்டோ 0.96 சதவீதம் சரிவடைந்துள்ளன.

அதேநேரத்தில் எட்டர்னல், பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

இரண்டு நாள்கள் சரிவுக்குப் பிறகு நேற்று ஏற்றத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.