வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ரூ.5,000 கோடி திரட்டும் ஆக்ஸிஸ் வங்கி

News image
Updated On :23 நவம்பர் 2025, 1:05 am

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியாா் துறை வங்கியான ஆக்ஸிஸ் வங்கி, வணிக வளா்ச்சிக்காக கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியாா் ஒதுக்கீடு அடிப்படையில் முழுமையாக செலுத்தப்பட்ட, மூத்த, மதிப்பிடப்பட்ட, பட்டியலிடப்பட்ட, பாதுகாப்பில்லாத, வரி விதிக்கக்கூடிய, மீட்கக் கூடிய, நீண்டகால கடன் பத்திரங்களாக அவை இருக்கும்.இது, வங்கியின் இயக்குநா் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.35,000 கோடி மூலதன திரட்டுதல் திட்டத்தின் ஒரு பகுதி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.