பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மலேசியாவில் அறிமுகமாகும் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்!

மலேசியாவில் புதிய மின்சார இருசக்கர வாகனம் அறிமுகமாகவுள்ளது குறித்து...

2026 EZI Ray 01 electric scooter

ரே 01 மின்சார ஸ்கூட்டர் - படம் / நன்றி - இ.இஸட்.ஐ

Published On :

சீனாவைச் சேர்ந்த இ.இஸட்.ஐ நிறுவனம் தயாரிக்கும் ரே 01 மின்சார ஸ்கூட்டர் மலேசியாவில் ஜூன் மாதம் அறிமுகம் ஆகவுள்ளது. மலேசிய ரிங்கிட்டில் இதன் விலை 2,288 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 54,000.

நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற மின்சார இருசக்கர வாகனமாக இ.இஸட்.ஐ ரே 01 வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை, நீலம், சாம்பல், கருப்பு என நான்கு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.

32 Ah திறன் உடைய பேட்டரியுடன், 2 கிலோ வாட் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரப் பயன்பாடு 72 வோல்ட்.

பேட்டரிக்கு 2 ஆண்டுகள் அல்லது 20,000 கி.மீ. வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 68 கிலோ மீட்டர் வேகம் செல்லலாம்.

மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினால் 120 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும்.

பின்புறம் இரட்டை ஸ்பிரிங் சஸ்பென்ஷன், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் உள்ளது.

ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று வகையான வேகங்களில் வாகனத்தை இயக்கலாம்.

வாகனத்தின் மொத்த எடை 130 கிலோ.

இருக்கையின் உயரம் 73.5 செ.மீ.

நகர்ப்புறங்களை மையமாக வைத்து இந்த மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கப்படுவதாக இ.இஸட்.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.