பின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், ரூபாய் அதன் மதிப்பை இழந்து 3 காசுகள் சரிந்து, வர்த்தக முடிவில் ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 6:22 pm IST

மும்பை: இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலரின் மதிப்பு வலுவடைந்ததாலும், உள்நாட்டுச் சந்தைகள் பலவீனமாக இருந்ததாலும், தொடக்க வர்த்தகத்தில் ரூபாய் அதன் மதிப்பை இழந்து 3 காசுகள் சரிந்து, வர்த்தக முடிவில் ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை மற்றும் ஈரான் மீதான புதிய அமெரிக்கத் தடைகள் உள்ளிட்டவையால், ரூபாய் - டாலர் வர்த்தகம் குறுகியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 95.65 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 95.64 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ. 95.75 என்ற நிலையில் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவை விட 3 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிலைபெற்றது.

வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக இருந்தது.

Summary

The rupee pared initial gains and settled for the day lower by 3 paise at 95.74.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.