நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டைட்டன் பங்குகள் 4% உயர்வுடன் நிறைவு!

டைட்டன் கம்பெனி லிமிடெட், டிசம்பர் 2025 காலாண்டு வருவாயில் 40% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்வுடன் நிறைவடைந்தன.

News image
Updated On :7 ஜனவரி 2026, 7:25 pm IST

புதுதில்லி: ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் கம்பெனி லிமிடெட், டிசம்பர் 2025 காலாண்டில் தனது தனிப்பட்ட வருவாயில் 40% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்வுடன் நிறைவடைந்தன.

பிஎஸ்இ-யில் டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 3.94% உயர்ந்து ரூ.4,272.90 ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது 4.88% உயர்ந்து ரூ.4,312 என்ற அதன் 52 வார உச்சத்தை எட்டியது.

என்எஸ்இ-யில் டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 3.92% உயர்ந்து ரூ.4,273.20 ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது 4.87% உயர்ந்து ரூ.4,312.10 என்ற ஆண்டின் உச்சத்தை அடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில், முக்கிய குறியீடுகள் சரிந்த நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யில் டைட்டன் பங்குகள் உயர்ந்ன.

சமீபத்திய காலாண்டு நிலவரங்களின் அடிப்படையில், டாடா குழும நிறுவனமான டைட்டன், அதன் வணிகத்தில் சுமார் 85% பங்களிப்பை வழங்கும் அதன் நகை பிரிவு, நிதியாண்டின் 3-வது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 41% உயர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Summary

Shares of jewellery and watch maker Titan Co Ltd ended nearly 4 per cent higher after the firm reported a 40 per cent annual growth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.