புதுதில்லி: ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் கம்பெனி லிமிடெட், டிசம்பர் 2025 காலாண்டில் தனது தனிப்பட்ட வருவாயில் 40% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்வுடன் நிறைவடைந்தன.
பிஎஸ்இ-யில் டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 3.94% உயர்ந்து ரூ.4,272.90 ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது 4.88% உயர்ந்து ரூ.4,312 என்ற அதன் 52 வார உச்சத்தை எட்டியது.
என்எஸ்இ-யில் டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 3.92% உயர்ந்து ரூ.4,273.20 ஆக நிலைபெற்றது. வர்த்தக நேரத்தின் போது 4.87% உயர்ந்து ரூ.4,312.10 என்ற ஆண்டின் உச்சத்தை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில், முக்கிய குறியீடுகள் சரிந்த நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-யில் டைட்டன் பங்குகள் உயர்ந்ன.
சமீபத்திய காலாண்டு நிலவரங்களின் அடிப்படையில், டாடா குழும நிறுவனமான டைட்டன், அதன் வணிகத்தில் சுமார் 85% பங்களிப்பை வழங்கும் அதன் நகை பிரிவு, நிதியாண்டின் 3-வது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 41% உயர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.