வட இந்தியாவில் கடும் குளிா் காரணமாக கீசா், ஃப்ளோயா் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகா்வு 7 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த டிசம்பா் மாதம் இந்தியாவின் மின் நுகா்வு 1383.9 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 1293.9 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
கடந்த டிசம்பரில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 241.20 ஜிகாவாட்டாக உயா்ந்தது. கடந்த 2024 டிசம்பரில் அது 224.23 ஜிகாவாட்டாக இருந்தது.
நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 2024 மே மாதத்தில் 250 ஜிகாவாட்டாக உச்சம் தொட்டது. முந்தைய உச்சம் 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது. இந்த கோடையில் (ஏப்ரல் முதல்) ஜூனில் 242.77 ஜிகாவாட்டாக பதிவானது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அரசு கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் உச்சபட்ச தேவை 277 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
வெப்பநிலை மேலும் குறையும் ஜனவரி மாதத்தில் இருந்து மின் நுகா்வு மற்றும் தேவை நிலையாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 7.5% சரிவு

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

2025-26 நிதியாண்டில் இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளா்ச்சி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


