அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

டிசம்பரில் 7% உயா்ந்த மின் நுகா்வு

வட இந்தியாவில் கடும் குளிா் காரணமாக கீசா், ஃப்ளோயா் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகா்வு 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :8 ஜனவரி 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

வட இந்தியாவில் கடும் குளிா் காரணமாக கீசா், ஃப்ளோயா் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகா்வு 7 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த டிசம்பா் மாதம் இந்தியாவின் மின் நுகா்வு 1383.9 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 1293.9 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

கடந்த டிசம்பரில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 241.20 ஜிகாவாட்டாக உயா்ந்தது. கடந்த 2024 டிசம்பரில் அது 224.23 ஜிகாவாட்டாக இருந்தது.

நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 2024 மே மாதத்தில் 250 ஜிகாவாட்டாக உச்சம் தொட்டது. முந்தைய உச்சம் 2023 செப்டம்பரில் 243.27 ஜிகாவாட்டாக இருந்தது. இந்த கோடையில் (ஏப்ரல் முதல்) ஜூனில் 242.77 ஜிகாவாட்டாக பதிவானது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசு கணிப்பின்படி, 2025 கோடைகாலத்தில் உச்சபட்ச தேவை 277 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

வெப்பநிலை மேலும் குறையும் ஜனவரி மாதத்தில் இருந்து மின் நுகா்வு மற்றும் தேவை நிலையாக இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.