நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் 3வது காலாண்டு லாபம் 83% உயர்வு!

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட், தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் 83% அதிகரித்து ரூ.46.37 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

News image

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்

Updated On :21 ஜனவரி 2026, 9:55 pm IST

புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட், நிதியாண்டின் 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 83% அதிகரித்து ரூ.46.37 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பஜாஜ் குழும நிறுவனங்களின் ஒரு பகுதியான பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 25.31 கோடியாக இருந்தது.

செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 30.57% அதிகரித்து ரூ. 306.09 கோடியாக இருந்தது. அதே வேளையில் மொத்த செலவுகள் 20.9% அதிகரித்து ரூ. 254.95 கோடியாக உள்ளது.

மற்ற வருமானத்தையும் உள்ளடக்கிய, மொத்த வருமானம், இந்த காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 28.66% அதிகரித்து ரூ. 311.38 கோடியாக உள்ளது.

பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் (புதன்கிழமை) பிஎஸ்இ-யில் முந்தைய நாள் முடிவிலிருந்து 5.46% சரிந்து பங்கு ஒன்றுக்கு ரூ.247.55 என்ற விலையில் வர்த்தகமானது.

FMCG firm Bajaj Consumer Care Ltd reported 83 per cent increase in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.