ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

காலாண்டு வருவாய் அறிவிப்புக்குப் பிறகு ரிலையன்ஸ் 3% சரிவு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3வது காலாண்டில் ரூ.18,645 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் சரிந்தன.

Reliance Industries

Published On :

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 3வது காலாண்டில் ரூ.18,645 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்ட பலவீனம் ஆகியவற்றால் இந்த மெத்தனம் என்றது நிறுவனம்.

பிஎஸ்இ-யில் 3.04% சரிந்து ரூ.1,413.25 ஆகவும், வர்த்தக நேரத்தின் போது 3.72% சரிந்து ரூ.1,403.30 ஆக இருந்தது.

என்எஸ்இ-யில் 3% சரிந்து ரூ.1,413.60 ஆகவும், வர்த்தக நேரத்தின் போது 3.74% சரிந்து ரூ.1,403.30 ஆக இருந்தது.

சென்செக்ஸில் அதிக சந்தை மதிப்புள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தித்ததால், பங்குச் சந்தை சரிவடைய இது முக்கிய காரணமாக அமைந்தது.

நாட்டின் மிகப்பெரிய குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜிஎஸ்டி வரி விகித சீரமைப்பு, நுகர்வோர் தயாரிப்பு மற்றும் வணிகம் உள்ளிட்டவை பிரித்து விடப்பட்டதால் சில்லறை வர்த்தகத்தில் மந்தமான வளர்ச்சியைக் கண்டதாக தெரிவித்தது.

நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.18,645 கோடியாக இருந்த நிலையில், கடந்த வருடம் இது ரூ.18,540 கோடியாக இருந்தது.

Summary

Shares of Reliance Industries Ltd declined 3 per cent after the firm reported almost a flat net profit of Rs 18,645 crore for the third quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.