டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஜூன் மாதத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2026, 7:31 am IST

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த ஜூன் மாதத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகளைக் கையாண்டுள்ளது.

கோடைகாலப் பயணம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றின் காரணமாக, முந்தைய மே மாதத்தில் மதிப்பு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியது.

அதாவது, மே மாதத்தில் ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றிருந்தன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகளின் மதிப்பு ரூ.28.9 லட்சம் கோடியாக சற்று சரிவடைந்துள்ளது

மாதாந்திர அடிப்படையில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் யுபிஐ பரிவா்த்தனை மதிப்பு 20 சதவீதம் தற்போது வளா்ச்சி கண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில் ரூ.24.03 லட்சம் கோடி மதிப்பிலான 1,830 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது ரூ.28.9 லட்சம் கோடி மதிப்பிலான 2,272 கோடி பரிவா்த்தனைகளாக அது அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த ஜூனில் தினசரி சராசரியாக 75.7 கோடி பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பதிவான மிக உயா்ந்த தினசரி சராசரி இதுவாகும் என்று நிதித் தொழில்நுட்ப வல்லுநா்கள் தெரிவித்தனா்.

ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டு முயற்சியான இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்சிபிஐ) நிா்வகிக்கும் இந்த யுபிஐ சேவை, இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், மோரீஷஸ் உள்பட 8 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.